Thursday, May 20, 2010

தந்தேத்வடா உணர்த்தும் பாடங்கள்

கடந்த இரு மாதங்களாக மாவோயிஸ்ட்கள் சத்திஸ்கர் மாநிலத்தில் நடத்தி உள்ள தாக்குதல் இந்தியா முழுவதும் ஒரு விதமான எண்ண அலைகளை உருவாக்கி உள்ளது. அந்த எண்ண அலை இதுதான் “மாவோயிஸ்ட்கள் இந்திய இறையாண்மையின் நிகழ்கால ஏதிரிகள்” என்பதே ஆகும். இது ஒரு அளவு உண்மையான விஷயமாக இருந்தாலும் இன்றைய இந்த நிலைக்கு யார், என்ன, எப்படி காரணம் என்பதை இந்திய அரசாங்கமோ, அல்லது ஆள்வோரோ, மற்றவர்களோ முழுதாக உணர்ந்துகொண்டதாக தெரியவில்லை.

மவோயிஸ்ட்கள் மீதான பார்வை அல்லது அவர்களின் செயல் விளைவை இந்திய அரசாங்கம் கவனத்தில் எடுத்துகொண்டு அவர்களை வேட்டையாட தொடங்கியது கடந்த 2009 ஆண்டின் மத்தியில் இருந்துதான். ஆபரேசன் கீரின் ஹண்ட் என்கிற மலைவாழ் பூர்வ குடியினர் மற்றும் பழங்குடியினரை அவர்கள் வசிக்கும் மலை பிரதேசங்களில் இருந்து அகற்ற தொடங்கபட்ட திட்டம்தான் இது. மாவோயிஸ்ட்கள் கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் லால்கர் கிராமத்தை பிடித்து வைத்தபோதே மத்திய அரசு உணர்த்திருக்க வேண்டிய விசயம் இது.

மக்கள் மாவோயிஸ்ட்கள் மீதான பார்வையை உணரதொடங்கிய போதே மத்திய அரசு விழித்திருக்கவேண்டும் ஆனால் அதைவிடுத்து தற்போது மாவோயிஸ்ட்கள் தங்கள் நிலையினை வழுப்படுத்தி கொண்ட பிறகு அதுவும் கிட்டதட்ட 150 பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் நீத்தபின்பு அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது அவர்களின் வளர்ச்சியை அரசே உறுதிசெய்தது போல உள்ளது. மாவோயிஸ்ட்கள் தங்கள் மீதான அரசின் பார்வை படமால் இந்த அளவு வளர ஒரு வகையில் அந்தந்த மாநில அரசுகளும் காரணம் என்பதும் உண்மை.

மாநில அரசுகள் இதை தங்களுக்கு இடப்பட்ட தனிப்பட்ட சாவாலாக எடுத்துகொண்டதும் ஒரு வகையில் அவர்கள் விரைவாக வளர மறைமுகமாக உதவியது போல ஆகிவிட்டது. இது மத்திய மாநில அரசுகளின் மொத்த விவகாரம், இதை கூட்டு நடவடிக்கையின் ஊடாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பதையும் மாநில அரசுகள் தற்போது காலம் கடந்து உணர்ந்துள்ளது.

மக்கள் ஒத்துழைப்பு இல்லாத எந்த போரட்டமும் நெடுநாள் நிடிக்க முடியாது, இவ்விஷயத்தில் மாவோயிஸ்ட்கள் தங்கள் மீதான சமுக பார்வையை கண்டு எந்தவிதத்திலும் வருத்தம் கொள்ளவில்லை. சிங்குர் மற்றும் லால்கரில் எற்ப்பட்ட மோசமான சம்பவங்கள் மக்கள் மாவோயிஸ்ட்கள் பக்கம் மக்கள் தஞ்சம் புக வேண்டியதாக போய் விட்டது. டாடாவிற்க்கு இடம் பெற்று தருவதில் எற்ப்பட்ட தவறான அணுகுமுறை மேற்க்கு வங்க அரசுக்கும் ஒரு விதமான தர்மசங்கடத்தை உருவாக்கியது. இதை சரியாக புரிந்துகொண்ட மாவோயிஸ்ட்கள் மக்களிடம் தங்கள் நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தி மாநில அரசாங்கத்தை தனிமைபடுத்தினர். இது அவர்களுக்கு ஒரு விதமான வசதிமற்றும் பாதுகாப்பு அரணாக போய்விட்டது.

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யாமல் அல்லது அவர்களுக்கான மாற்று வருமான வாழ்வாதார வழிகளை எற்படுத்திதராமல் அவர்களின் இருப்பை அகற்றும் மாநில அரசின் செயல் எதிர்விளைவுகளையே தரும் என்பது இப்போது கண்கூட காண்கிறோம்.

இதுதவிர மாவோயிஸ்ட்களிடம் தன்னுடைய அறிவார்ந்த திறமையை காட்டுகிறேன் பேர்வழி என்று மத்திய உள்துறை அமைச்சர் சில கருத்துக்களை சொன்னது அரசாங்கம் மாவோயிஸ்ட்ட்களின் முதல் எதிரியாக மாறிவிட்டது. தங்களுடைய நிலையில் இருந்து அவர்களை இறங்கி வந்து பேச வைக்க மத்திய அரசு மிகவும் கஷ்ட்டபட வேண்டியுள்ளது. மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை அவர்கள் நிரகரித்துள்ளதே அதற்கு சாட்சி.

இந்த பிரச்னையினை மொத்தமாக ஒரிரு நாளிலோ அல்லது மாததிலோ தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் பின்வருமாறு செயல் படவேண்டும்.

1. ஆப்ரேசன் கீர்ன் ஹாண்ட் நடவடிக்கையை உடனே கைவிடவேண்டும்
2. மலைவாழ் மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொது வினியோக திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
3. இன்றைய நிலையில் அவர்கள் வசிக்கும் இடங்களில் உள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரைவார்க்கும் ஒபந்தங்களை மறுபரிசீனை செய்யவேண்டும்
4. அவர்கள் வாழ்விடங்களை விட்டு அகற்றும் முடிவை எடுக்கும் முன் மாற்று இடங்கள் அமைத்து தரவேண்டும். ( இன்றைய நிலையில் அவர்களை வாழ்விடங்களில் இருந்து அகற்றும் முடிவை நெடுநாள் தள்ளிப்போட முடியாது)
5. மலைவாழ் மக்களை ஒழிக்க உருவாக்கிய ஹுடும் ஜுடா போன்ற மக்கள் விரோத போலீஸ் படையை கலைக்க வேண்டும்.
6. மேற்கண்ட அனைத்தும் நடக்கும்வரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முடிவை கைவிடக்கூடாது.
7. ராணுவத்தையோ அல்லது விமானப்படையை உபயோகப்படுத்த கூடாது, அவ்வாறு பயன்படுத்தினால் தற்போது ஒரளவு மக்களுடன் கலந்துவிட்ட மாவோயிஸ்ட்களுடன் அப்பாவிகளும் சேர்ந்து இறப்பது உறுதி.

இந்திய அரசாங்கம் இன்றைய நிலையில் மக்கள் புரட்சியினை எதிர்நோக்கி உள்ளது. உலக அளவில் எற்பட்டு உள்ள பொருளாதார தேக்கம் 2008 ஆண்டில் அமெரிக்கவை அதிகம் பாதித்தது தற்போது அது ஐரோப்பிய யூனியனில் உள்ள கிரேக்க நாட்டை சூரையாடி வருகிறது.

பெருபான்மையான மக்கள் பொருளாதார சீரழிவிற்க்கு உள்ளாகும்போது மெல்ல வன்முறையை வழியாக கொண்ட புரட்சி குழுக்களுக்கு ஆதரவை தர ஆரம்பிக்கிறது. இந்தியாவில் இப்போது மெல்ல அந்த நிலை கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்காளம், ஒரிசா, சத்திஸ்கர், பிகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவைகளில் படர தொடங்கியுள்ளது.
இதன பின்தொடர்ச்சி மற்ற மாநிலங்களில் வெகுவிரைவில் ஊடுருவ போகிற நாள் வெகுதொலைவில் இல்லை.

மக்கள் நலன் சாராத எந்த பொருளாதாரா முயற்சியும் அரசாங்கத்திற்க்கு வேறு வழிகளில் பிரச்சனைகளை உண்டு பண்ணுமே தவிர வேறு நற்பலன்களை தராது. அது இன்றைய உள்துறை அமைச்சருக்கு நன்றாக தெரியும் ஏன் என்றால் இதற்கு முன் அவர் கையாண்ட பொருளாதார துறையை அவர் விட்டுவைத்து சென்ற நிலையினை கண்டாலே புரியும்.

மாநில அரசும் பொருளாதார மண்டலங்களை பெருக்க முயற்சிப்பதைவிட இது போன்ற வன்முறை குழுக்களை ஒடுக்க வேண்டும், இல்லையெனில் ஒரு லட்சம் பேர் பயன் பெறக்கூடிய ஒபந்தங்கள் 10 லட்சம் மக்களின் வாழ்வாதார பிரச்சனையாகிவிடும். மத்திய அரசுக்கு அது 100 கோடி மக்களின் வாழ்வாதார பிரச்சனை ஆகிடும்.

இப்படிக்கு

தமிழ் உதயன்