Friday, July 2, 2010

பெட்ரோலால் எரியும் அரசியல்

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர் அணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் எதிர்த்து வருவது நம் அறிந்ததே.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக வரும் 5 திகதி அறிவிக்கப்பட்டு உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்ததிற்க்கு அனைத்து எதிர் அணி கட்சிகள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்ததை வெற்றி அடைய வைக்க வேண்டும்.

முதலாவதாக இந்த உயர்வை தவிர்த்து இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது, அரசு சொல்லும் காரணமான இந்த விலை உயர்வு சர்வதேச சந்தையில் எற்ப்பட்ட உயர்வை கொண்டே எடுக்கப்பட்ட முடிவு என்பது சற்றே எற்புடையதாக இருந்தாலும் ஏன் இந்தியாவில் மட்டும் எரிபொருள் விலை இந்த அளவு உள்ளது என்பதை அதிகமாக உணர்ந்தவர் யாரும் இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகபட்சமாக பீப்பாய் ஒன்றுக்கு 77 அமெரிக்க டாலராக உள்ளது. இது 159 லிட்டர் கச்சா எண்ணெயின் அளவாகும். டாலர் ஒன்றுக்கு 50 ரூபாய் விதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை ரூ.3850/-. சராசரி ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ரூ 24.50/- மட்டுமே. இதன் பிறகான சுத்திகரிப்பு மற்றும் தரம் பிரித்தல் ஆகியன ரூ.6.50/- அதிகபட்சமாக செலவாகும். மொத்தம் ரூ.31 ஒரு லிட்டர் பெட்ரோல் விலை. ஆனால் சந்தையில் நாம் செலுத்தக்கூடிய விலை குறைந்தபட்சம் ரூ.55/-.
சுமார் ரூ.24/- விதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்திய அரசுக்கு வரி வருவாயாக செல்லுகிறது.
இந்த வரி அளவை குறைப்பது பற்றி இந்திய அரசு இதுவரை கருத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் இந்த 24 ரூபாயில் மாநில அரசின் விற்பனை வரியும் அடங்கியுள்ளது. இது 90% மத்திய அரசின் கையில் உள்ள விவகாரம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்றும் எப்போதும் போல மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்றே பெட்ரோலிய அமைச்சர் சொல்லி வருகிறார். உண்மை இவ்வாறு இருக்க மத்திய அரசும் சரி, அதனுடன் கொள்(ளை)கை கூட்டணி வைத்து இருக்கும் மாநில அரசுகளும் சரி இந்த வியசத்தில் இரட்டை வேடம் கொண்டு பேசுகின்றன.

இரண்டாவதாக, பெட்ரோல் மீதான அரசின் விலைகட்டுப்பாட்டையும் அரசு தளர்த்தி இப்போது ஆயில் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் இஷ்ட்டப்படி விலையை நிர்ணயித்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை கண்டிப்பாக எந்தவித பலன்களையும் சாமனியனுக்கு வரும்காலத்தில் தரப்போவது இல்லை. பெட்ரோல் பொருள் மீதான விலை நிர்ணையம் என்பது இன்று வரை அரசின் மறைமுக மற்றும் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதை இப்போது அரசு தாரைவார்த்துள்ளது.

இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு எற்படும் இழப்பை சரிக்கட்ட விலையை உய்ர்த்தி சரிபடுத்திகொள்ள அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் மீதான அரசின் பிடியில் இருந்து மூழுவதுமாக விடுபடுவது மற்றும் இன்றி சர்வதேச எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களில் மீது ஏற்ப்படும் லாபத்தில் ஒரு மிக பெரும் பகுதியை அடைய போகிறது. எண்ணெய் நிறுவனங்களூக்கு இது ஒரு போனஸாக கிடைக்க போகிறது.

இந்த முடிவானது, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை உயர்த்த போவது என்னவோ உண்மை. அதே நேரம் ஒரு விஷயத்தை உற்று நோக்க வேண்டும் அதிமுக்கிய 4 எண்ணெய் நிறுவனங்களில் அதிகபட்ச பங்குகள் இந்திய அரசால் கைகொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ஈட்டும் லாபமானது இந்திய அரசுக்கு வட்டியாகவும், டிவிடண்டாகவும் சென்றடைகிறது. எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் குறையுமேயானால் (லாபம் அதிகமானால்) அது இந்திய அரசுக்குத்தான் நன்மை. சாதாரணமானவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதேவேளையில் கட்டுப்பாடற்ற விலை நிர்ணையம் என்பது இந்த 4 நிறுவனங்களை தவிர்த்து எஸ்ஸார், ரிலையன்ஸ், ஷெல் போன்ற எண்ணெய் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு கொள்ளை லாபத்தை அளிக்க போகிறது. இது ஒரு வகையில் இந்த தனியார் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ள மறைமுக சலுகை (வழமை போலவே இதற்காக இந்த தனியார் எண்ணெய் நிறுவனங்கள் எவ்வளவு கையூட்டு அளித்தன என்பது தெரியவில்லை) இதன் மூலம் விளங்குவது என்னவென்றால், இந்த விலை உயர்வு அரசுக்கும் தனியார் எண்ணெய் நிறுவனங்களூக்கும் கொளுத்த லாபம் என்பதே ஆகும்.



எண்ணெய் விலை உயர்வையும் அதன் அரசியலையும் தவிர்க்க என்ன வழி?

1. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் என்ற நிலையை மறந்து மத்திய அரசைவிட வேகமாக சந்தை பொருளாதார கூறான லாபம் ஒன்றே என்ற நிலையை கைவிட வேண்டும். அதற்கு முதலாவதாக ”நிர்வகிக்கப்பட்ட விலை நிர்ணையமுறை” அதாவது பெட்ரோல் விலை சுயநிர்ணைய முறையை திரும்ப பெற மத்திய அரசு முன் வர வேண்டும். ஒரு முறை லாபம் பார்க்க தொடங்கிவிட்டால் இந்த நிறுவனங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவர்களை கவனித்து இந்த சுய விலை நிர்ணைய முடிவை வாபஸ் பெற விடமாட்டார்கள் என்பதே உண்மை.

2. கச்சா எண்ணெய் மீதான உற்பத்தி வரியை மறுபரீசிலனை செய்து தற்போது உள்ள வரி விகித்ததை குறைக்க வேண்டும்.

3. மாநில அரசுகள் அனைத்தும் ஒரே விதமான விற்பனை வரி விகிதத்தை கையாள மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

4. பெட்ரோல் விலை மீதான பரிசீலனை ஒவ்வொரு 3 மாத்திற்க்கு ஒரு முறை நடைபெற வேண்டும். எதேதெற்கோ கூடும் மத்திய அமைச்சரவை இதற்கு ஒரு முறை கூடினால் ஒன்றும் தப்பில்லை.

5.தனியார் நிறுவனங்கள் தங்கள் பெட்ரோல் மீதான விலையை சந்தை விலையை விட குறைவாக/அதிகமாக விற்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் கண்டிப்பாக உண்மை விலையில் அவர்கள் விற்க முன்வருவார்கள். (ரிலையன்ஸின் முடிகிடந்த பங்குகள் இன்று மீண்டும் திற்ந்திருப்பதே சாட்சி)

இன்றைய இந்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் வழிமாறிய வழிபோக்கனை போல உள்ளது. எண்ணெய் விலை உயர்வானது பணவீக்கத்தை உயர்த்துவதோடு இல்லாமல் சாமானிய மக்களின் வாங்கும் சக்தியையும் குறைத்துவிடுகிறது. இதன் மூலம் உற்பத்தி துறை சற்றே சுணக்கம் காணலாம் அதனுடாக பொருட்களின் விலை மீண்டும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு வரும் 5 தேதி நடைபெற உள்ள விலையுர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எதிர்கட்சிகளின் மற்றும் ஒரு சம்பரதாயமாண நிகழ்வாக கொள்ளகூடாது. ஏன் என்றால் மக்கள் விழிப்புணர்வு பெற தொடங்கிவிட்டார்கள். அவ்வாறன விழிப்புணர்வு ஆட்சியாளர்களுக்கு வேறு வழிகளில் துன்பத்தைதரும் என்பதே உண்மை. அதற்கு இன்றைய நிதர்சன உதாரணம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 26 படைவீரர்கள் பலி.

ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டிய நேரமிது..