Friday, October 14, 2011

எதை நோக்கிய வாழ்வுமுறை?

bangalore-aunty-working-in-bpo-smoking

மெல்ல தணியும் இரவு வாகன வெளிச்சம்

முன்னிரவை தழுவ முயற்சிக்கும் பின்னிரவு

புகை பரப்பி விரைந்தோடும் வாகனங்கள்

நெடுநாளைய தூக்கம் தொலைத்த பெண்கள்

ஜன்னல் அருகருகே அமர்ந்து அவதனித்து

காற்றில் கூந்தல் களைவதை அறியாமல்

செல்லும் அவ்விளம் பெண்ணின் முகம்

எதை நோக்கி இவ்வாழ்க்கை உனக்கு?

முறைமாறி உழைக்கும் இவ்வாழ்க்கை பயணம்

ஏற்றத்தை தரும் என்றா நினைத்தாய்?

எதை பெறுகிறாய் முன்னிரவுபத்து மணி முதலான

மறுநாள் காலை 8 மணியான வரைவாழ்க்கை

பின்பு ஓட்டமும் நடையுமான காலை வாழ்வு


நேரம் மாறி பெறும் தூக்கமும்

நேரம் மாறி பெறும் உணவும்

நேரம் மாறி பெறும் ஓய்வும்

மணிகூண்டை தலைகீழாய் மாட்டியதற்க்கு

ஒப்பாகும் என்றறிவாயா?

வெட்கமும் கோபமும் துக்கமும் சிரிப்பும்

அழுகையும் காதலும் காமமும் கண்ணீரும்

உலகமே உறங்கும் போது நீ பெறுகிறாய்

எதை நோக்கி இப்படி தலைகீழாய் ஒடுகிறாய்

பதில் தெரியாமல் படுத்துறங்கி போனேன்…..

- தமிழ் உதயன்

Monday, January 31, 2011

நாணயம் விகடனில் நான்

என் பேட்டி நாணயம் விகடனில் வெளிவந்துள்ளது. 5.2.2011 இதழ்.
சும்மா ஒரு பக்கம்தான். இதுக்காக இவ்வளவு விளம்பரமா என்று கேட்க வேண்டாம். ஏதோ நம்மால முடிஞ்சது.

Thursday, December 9, 2010

வாழ்வு அழுத்தமும் தற்கொலைகளும்


உலகமய சூழலில் நகர வாழ்வு என்பது அதிக அழுத்தம் தருவதாக உள்ளது. இந்த அழுத்ததின் விளைவால் ஏழ கூடிய வாழ்வியல் கடும் சூழல் இன்று ஏழை எளியோர் தாங்க்கூடியதாக இல்லை. இந்த நிலையில் நகர மய அழுத்தம் என்பது தொழிலாளர்களைதான் அதிகமாக பாதிக்கிறது. கடந்த 11 மாதங்களில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் 443 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சூழல் என்பது தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இடங்களில் அதிகமாக நடைபெற முக்கிய காரணம் வாழ்வு முறை மாற்றங்கள் மட்டுமில்லாது பொருள் தேடும் வழிகளும் கடினமாகி வருவதுதான். முந்தைய பத்தாண்டுகளுக்கு முன்பு எவை எல்லாம் ஆடம்பாரமாக இருந்ததோ அது அனைத்தும் இன்றைக்கு அத்தியாவிசயமானதாகி விட்டது. அதிகரித்துவரும் நகரமயம் என்பது மிக முக்கியமாக மனிதன் வாழுமிடதிற்கான தேவை அதிகமாகி வீட்டு வாடகையில் அதிகம் செலவு செய்வதில் தொடங்குகிறது.

மனிதனின் இருப்பிட தேவைக்கு ஏற்ற நகரமயம்தான் இன்றைக்கு ஒழுங்கான நகரமயமாக இருக்க முடியும் ஆனால் இன்றைய நிலையில் வாழ்வில் பொருள் தேடி இடம் பெயரும் மனிதர்கள் மிக முக்கியமாக இருப்பிடத்திற்க்கு தருகிற வாடகை அதிகமாக உள்ளது. மனிதர்கள் வாழும் சூழல் அல்லாத இடத்தில் கூட இன்றைக்கு நகரத்திற்க்கு இடம் பெயரும் மனிதர்கள் வாழ்கிறார்கள். உலகமயம் தந்த நியான் வெளிச்ச கடைகளும், அமெரிக்க மோக வாழ்வு முறைகளும், அளவுகதிகமான விளம்பரங்களால் மனிதனின் வாங்கும் உணர்வை தூண்டும் நுகர்பொருள்களும், பகட்டான வாழ்வினை வாழ்வோரின் ஆடம்பரசெலவுகளும், அதிகரித்துவரும் விலைவாசி உயர்வுகளும் என்று பல காரணங்களால் இன்றைக்கு மனிதனின் நியாயமான தேவைகள் அதிகமாகிவிட்டன. இதன் விளைவாக மனிதன் தன்னுடைய திறமைக்கு மேலான சம்பாரிப்பை செய்ய வேண்டியுள்ளது. அத்தியாவிசய அடிப்படை தேவைகளை தாண்டியும் பெற இந்த சமூகம் ஒவ்வொரு மனிதனையும் பணிக்கிறது. இந்த முறையற்ற கால ஒட்டத்தில் வெறியுடன் பங்கு கொண்டால் ஒழிய நாம் வெல்ல முடியாது என்கிற நிலையினை சாதாரண மனிதன் உணர்ந்து வெகு நாட்கள் ஆகிறது. இப்படி ஒரு தன் ஒழுங்கில்லாத போட்டியின் விளைவால் ஏற்படுகிற விரக்தி முதலில் கடனில் தள்ளுகிறது. பிறகு அந்த கடனை அடைக்க முடியாத போது சண்டை சச்சரவை வளர்க்கிறது.

பெரும்பாலான தற்கொலைகள் அதாவது 40% தற்கொலைகள் இன்றைக்கு கடன் தொல்லையின் விளைவால் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்லுகிறது. அதற்கு அடுத்தபடியாக குடும்ப சச்சரவுகள் காரணமாக ஏற்படுவதாக சொல்லுகிறார்கள். இந்த அனைத்துக்குமே நன்கு உற்று நோக்கி அடிப்படை காரணத்தை கண்டறிந்தோமேயானால் அது பொருளாதார காரணமாகதான் இருக்கும் என்பது உண்மை. பிரச்சனைகளை கண்டு சாதாரண மனிதன் பயந்தது இல்லை, அப்படி பயந்திருந்தால் இன்றைக்கு அவன் இயற்கையை வெல்ல எத்தனிக்க மாட்டான். ஆனால் தனிமனித பிரச்சனைகளை கையாள இயலாத போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியை / ஆலோசனையை நாட தயங்க கூடாது அப்போதுதான் மனிதன் தன்னை உணர முடியும் தன்னுடைய சவால்களையும் வெல்ல முடியும். மனிதகுலம் கண்டறிந்த தீமைகளிலேயே முக்கியமானது இரு தீமைகள்தான். அதில் ஒன்று, சகமனிதனை கொல்லுதல், இரண்டாவதாக தன்னை தானே அழித்து கொள்ளுதல் ஆகும். முதலாவதை முதலாளித்துவம் நேரடியாக செய்கிறது, இரண்டாவதை அது மறைமுகமாக செய்ய தூண்டுகிறது. உண்மையா இல்லையா சொல்லுங்கள்?